ADDED : ஜூலை 23, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை; கீழக்கரை அருகே மாயாகுளம் விவேகானந்தபுரம் மீனவர் முருகேசன் 42. நேற்று முன்தினம் அதிகாலை நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி கடலில் விழுந்தார். அருகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து நீண்ட நேரத்துக்கு பிறகு முருகேசன் உடலை மீட்டனர்.
முருகேசனுக்கு மனைவி செல்வராணி, ௨ மாத ஆண் குழந்தை உள்ளது. கீழக்கரை மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.