/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரும்பு வீல் தாக்கி மீனவர் காயம்
/
இரும்பு வீல் தாக்கி மீனவர் காயம்
ADDED : ஜன 29, 2024 05:29 AM
ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த படகில் இருந்த ராமேஸ்வரம் மீனவர் ரோடிக் 22, மீது சிறிய இரும்பு வீல் தாக்கியதில் காயமடைந்தார்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 450 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
இதில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த வியாகுல அந்தோணி என்பவரது படகில் 5 மீனவர்கள் மீன்பிடித்தனர். அப்போது படகின் இரும்பு கப்பியில்(வீல்) இருந்த கயிறு அறுந்து விழுந்து அது மீனவர் ரோடிக் 22, என்பவரை தாக்கியது.
இதில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் கடலில் வீசிய வலையை படகில் இழுத்து வைத்து நேற்று காலை கரை திரும்பினர். ரோடிக் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.