/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புயல் எச்சரிக்கையால் 6ம் நாளாக மீனவர்களுக்கு தடை
/
புயல் எச்சரிக்கையால் 6ம் நாளாக மீனவர்களுக்கு தடை
ADDED : நவ 30, 2024 02:41 AM

ராமேஸ்வரம்:வங்க கடலில் உருவான புயல் சின்னத்தால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6வது நாளாக மீன்பிடிக்கச் செல்ல மீன் வளத்துறையினர் தடை விதித்தனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நவ., 24 முதல் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன.
இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது சிரமம் என்பதால் நவ., 24 முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.
இதனால் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை கரையில் நிறுத்தி மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர். இந்நிலையில் 6ம் நாளான நேற்றும் மீன்பிடிக்க செல்ல தடை நீடித்ததால் கடலோரப் பகுதியில் டீக்கடைகள், லேத் பட்டறைகள் மூடப்பட்டு மீனவர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. அன்றாட குடும்பச் செலவுக்கு வழியின்றி மீனவர்கள் தவித்தனர்.