/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீன்வரத்து அதிகரிப்பு மீனவர்கள் மகிழ்ச்சி
/
மீன்வரத்து அதிகரிப்பு மீனவர்கள் மகிழ்ச்சி
ADDED : ஜன 06, 2025 03:32 AM

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மூன்று நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில், அதிக மீன்கள் சிக்கியதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வங்கக் கடலில் வீசிய சூறாவளியால் ஜன., 1 முதல் 3 வரை ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் சூறாவளி வேகம் தணிந்ததும் ராமேஸ்வரத்தில் இருந்து 420 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர்.
இதில் பெரும்பாலான படகில் விலை உயர்ந்த இறால் மீன், கணவாய் மீன் மற்றும் காரல் மீன்கள் அதிக அளவில் சிக்கியது.
இவற்றுக்கு உரிய விலை கிடைத்ததாலும், இலங்கை கடற்படை கெடுபிடி இன்றி மீன்பிடித்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.