sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் லாரியில் ஏற்றி வந்து மானிய டீசலை விற்கும் மீனவர்கள்

/

ராமேஸ்வரத்தில் லாரியில் ஏற்றி வந்து மானிய டீசலை விற்கும் மீனவர்கள்

ராமேஸ்வரத்தில் லாரியில் ஏற்றி வந்து மானிய டீசலை விற்கும் மீனவர்கள்

ராமேஸ்வரத்தில் லாரியில் ஏற்றி வந்து மானிய டீசலை விற்கும் மீனவர்கள்


ADDED : டிச 19, 2024 04:40 AM

Google News

ADDED : டிச 19, 2024 04:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மீன்துறை அதிகாரிகள் ஆசியுடன் மானிய டீசலை கேனில் நிரப்பி லாரியில் பாம்பனுக்கு விற்பனை செய்ய எடுத்துச் செல்வதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

ராமேஸ்வரத்தில் 650 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் அனுமதித்து மாதத்திற்கு தலா 1900 லிட்., டீசல் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதனால் ஒரு படகின் உரிமையாளர் ஓராண்டில் (10 மாதம் மட்டும்) 19 ஆயிரம் லிட்., டீசலை மானிய விலையில் பெறுகின்றனர்.

இந்நிலையில் சிலர் படகுகளை மட்டும் மண்டபம், பாம்பன் மீனவர்களிடம் விற்ற நிலையில் இப்படகின் மானிய டீசல் புத்தகத்தை விற்பதில்லை. படகுகள் இல்லாத நிலையில் மானிய டீசலை வாங்கி பாம்பனில் உள்ள கனரக படகுகளுக்கு லாரியில் ஏற்றிச் சென்று விற்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் மீனவர்சங்க தலைவர் என்.ஜே.போஸ் கூறுகையில், ராமேஸ்வரத்தில் இல்லாத 100க்கும் மேற்பட்ட படகுகளின் மானிய டீசலை லாரியில் வாங்கி வந்து பாம்பனில் உள்ள கனரக படகுகளுக்கு கூடுதல் விலைக்கு மீனவர்கள் சிலர் விற்கின்றனர். இதனை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் ராமேஸ்வரத்தில்இருந்து பாம்பனுக்கு லாரியில் ஏற்றிச் செல்லும் போது எரிபொருளால் தீவிபத்து ஏற்பட்டு மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து விசாரித்து லாரியில் டீசலை ஏற்றிச் செல்லும் மீனவர்கள், உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us