ADDED : ஆக 12, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மீனவர்கள் 4 பேரை ஆக.,18 வரை சிறைக்காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பாலைக்குடியை சேர்ந்த மீனவர்கள் விமல்ராஜ் 24, மாதேஷ் 20, கார்த்தி 21, சக்தீஸ்வரன் 21, ஆகியோர் ஆக.,5ல் நாட்டுப்படகில் சென்று கடலில் மீன் பிடித்தனர். கச்சத்தீவில் வலையை காயவைத்து சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் 4 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். விசாரணை நாளான நேற்று மீனவர்களை ஊர்காவ ல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். மீனவர்களுக்கான காவலை ஆக.,18 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

