/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐந்து நாளுக்கு பின் மீன்பிடிப்பு
/
ஐந்து நாளுக்கு பின் மீன்பிடிப்பு
ADDED : ஜன 19, 2025 02:23 AM
ராமேஸ்வரம்:சூறாவளியின் வேகம் தணிந்ததால் 5 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜன., 13 முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் ஓய்வு எடுத்தனர். ஜன.,15 முதல் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியதால் ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் ஜன.,15 முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.
நேற்று சூறாவளியின் வேகம் தணிந்ததால் மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் 5 நாட்களுக்கு பின் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 410 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

