/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏழு நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க அனுமதி
/
ஏழு நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க அனுமதி
ADDED : டிச 14, 2024 02:52 AM
ராமேஸ்வரம்:சூறாவளியின் வேகம் தணிந்ததால் 7 நாட்களுக்கு பின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன் வளத்துறையினர் அனுமதி அளித்தனர்.
இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்ததை கண்டித்து டிச.,7ல் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஸ்டிரைக் செய்தனர். டிச.,9ல் மீன்வளத்துறையினர் 125 படகுகளுக்கு அனுமதி டோக்கன் வழங்காததை கண்டித்து வேலை நிறுத்தம் செய்தனர். இதனைத்தொடர்ந்து வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் டிச.,11ல் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
இதனால் தொடர்ந்து 7 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்கள் வருவாய் இன்றி தவித்தனர். இந்நிலையில் சூறாவளி வேகம் தணிந்ததால் இன்று (டிச.,14) ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி டோக்கன் வழங்க உள்ளனர். இவர்களுடன் மண்டபம் பகுதி மீனவர்களும் மீன்பிடிக்க செல்கின்றனர்.