/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
16வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை
/
16வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை
ADDED : டிச 02, 2025 04:18 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 16வது நாளாக மீன்பிடிக்க செல்ல தடை நீடிப்பதால் வருவாய் இன்றி தவிக்கின்றனர்.
நவ.,14 முதல் வங்கக் கடலில் வீசிய சூறாவளி, கடல் கொந்தளிப்பால் அன்று முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதனால் 1500 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு, 20 ஆயிரம் மீனவர்கள், கடல்சார் தொழிலாளர்கள் வேலை இன்றி வீடுகளில் முடங்கினர்.
இதற்கிடையில் கடல் சீற்றம் தணிந்ததும் நவ.,22ல் மீனவர்கள் மீன்பிடித்து விட்டு மறுநாள் கரை திரும்பினார்கள்.
இதன் பின் மீண்டும் வங்கக் கடலில் உருவான சூறாவளி, கடல் சீற்றம் மற்றும் டிட்வா புயலால் நவ., 24 முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு மீன்துறையினர் மீண்டும் தடை விதித்தனர்.
இதனை தொடர்ந்து நேற்றுடன் 16ம் நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் அன்றாட குடும்ப செலவுக்கு வழியின்றி தவிக்கின்றனர்.
இதனால் மீனவ இளைஞர்கள் பலரும் வேலை தேடி கன்னியாகுமரி, கேரளா சென்றுள்ளனர்.

