sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகில் மீன்பிடிக்க தடை

/

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகில் மீன்பிடிக்க தடை

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகில் மீன்பிடிக்க தடை

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகில் மீன்பிடிக்க தடை


ADDED : ஏப் 11, 2025 02:58 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:கோடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை தமிழகத்தில் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு மீன்துறையினர் தடை விதித்தனர்.

கோடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கம் சீசனாக உள்ளதால் இச்சமயத்தில் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றால் மீன்கள் உற்பத்தி பாதிப்பதுடன் மீனவர்களுக்கும் மீன்வரத்தின்றி நஷ்டம் ஏற்படும். ஆகையால் கோடை காலத்தில் இரு மாதங்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என கடல்சார் விஞ்ஞானிகள் அறிவுறுத்தினர்.

அதன்படி 2001 முதல் கோடை காலத்தில் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. வழக்கம் போல் இந்த ஆண்டு ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முதல் சென்னை வரை உள்ள 8000 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் ஏப்.,13 முதல் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைக்க உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us