/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் அருகே மீன்பிடி திருவிழா
/
முதுகுளத்துார் அருகே மீன்பிடி திருவிழா
ADDED : ஏப் 21, 2025 05:32 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காத்தாகுளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.
காத்தாகுளம் கிராமத்தில் கடந்தாண்டு பெய்த பருவ மழையால் ஊருணி, கண்மாயில் தண்ணீர் தேக்கி வைத்து மீன்கள் வளர்த்தனர். தற்போது தண்ணீர் வற்றியதால் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதன்படி நேற்று காத்தாகுளத்தில் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.
கிராமமக்கள் உபகரணங்களான கச்சா வலை, ஊத்தா, கூடைகள் உள்ளிட்டவைகளை கொண்டு மீன் பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, கெண்டை உள்ளிட்ட ஏராளமான மீன்களை பிடித்தனர். பிடிபட்ட மின்களை யாரும் விற்பனை செய்ய மாட்டார்கள். மீன்பிடி திருவிழா நடத்தப்படுவதால் அதிக மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.