sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் அருகே தடை செய்த மடியில் மீன்பிடிப்பு: மீன்துறை வழக்கு

/

ராமேஸ்வரம் அருகே தடை செய்த மடியில் மீன்பிடிப்பு: மீன்துறை வழக்கு

ராமேஸ்வரம் அருகே தடை செய்த மடியில் மீன்பிடிப்பு: மீன்துறை வழக்கு

ராமேஸ்வரம் அருகே தடை செய்த மடியில் மீன்பிடிப்பு: மீன்துறை வழக்கு


ADDED : நவ 25, 2024 07:02 AM

Google News

ADDED : நவ 25, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் தடை செய்த இரட்டைமடியில் மீன்பிடித்த இருபடகின் உரிமையாளர்கள் மீது மீன்துறையினர் வழக்கு பதிந்தனர்.

கடல் வளம், மீன்வளத்தை அழிக்கக்கூடிய இரட்டைமடி, சுருக்குமடியில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், பகுதியில் ஜன., முதல் ஏப்.,15 வரை தடை செய்த இரட்டைமடியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளில் இருபடகுகள் இணைந்து இரட்டை மடியில் மீன்பிடித்து மீனவர்கள் கரை திரும்பினார்கள். தகவலறிந்த மண்டபம் மீன்துறை உதவி இயக்குநர் சிவக்குமார், அதிகாரிகள் இரு படகையும் பிடித்து உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்தனர்.

இப்படகிற்கு மீன்பிடி அனுமதி டோக்கன், மானிய டீசல் ரத்து செய்யப்பட்டு மீன்துறை துணை இயக்குநர் அபராதம் விதிக்கும் வரை இருபடகுளிலும் மீன்பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us