ADDED : ஆக 30, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் மஹான் புலவரப்பா தர்ஹா 42வது ஆண்டு கந்துாரி விழா, கொடி யேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஆலிம் முகமது மன்சூர் கிராத் ஓதினார். ஆலிம் நஜ்முதீன் துவா ஓதிய பின் கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவின் தொடர்ச்சியாக செப்.,11ல் கந்துாரி விழாவை முன்னிட்டு நெய் சோறு வழங்கும் நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து செப்.,18 மாலை நடைபெறும் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை மஹான் புலவரப்பா தர்ஹா கந்துாரி குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.