sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடலோரப்பகுதிகளில்  மாங்குரோவ் காடுகள் வளர்க்க வனத்துறை முடிவு 

/

கடலோரப்பகுதிகளில்  மாங்குரோவ் காடுகள் வளர்க்க வனத்துறை முடிவு 

கடலோரப்பகுதிகளில்  மாங்குரோவ் காடுகள் வளர்க்க வனத்துறை முடிவு 

கடலோரப்பகுதிகளில்  மாங்குரோவ் காடுகள் வளர்க்க வனத்துறை முடிவு 


ADDED : ஜன 29, 2025 06:27 AM

Google News

ADDED : ஜன 29, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தேவையான மழை பெய்துள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப்பகுதிகளில் அலையின் சீற்றத்தை தடுக்கும் விதமாக மாங்குரோவ் காடுகளை விரிவாக்கம் செய்வதற்கு வனத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கடலுார், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாங்குரோவ் காடுகள் உள்ளன.

பேரழிவை ஏற்படுத்தும் சுனாமியின் சீற்றத்தை தடுத்ததில் மாங்குரோவ் (அலையாத்தி) காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஈர நிலங்கள் மாசை ஏற்படுத்தும் கார்பனை சேமித்து பகிர்ந்தளிப்பதில் சிறப்பாக பணியாற்றுகின்றன. நத்தைகள், நண்டு, சிங்கி இறால், கடற்புல், ஆக்காட்டி குருவி, வெண்கொக்கு, நாரை கடல் சிப்பி, மீன் இனங்ககள் என பல ஆயிரம் கடல்வாழ் உயிர்களின் உறைவிடமாக மாங்குரோவ் செடிகள் உள்ளன.

பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடமாக மாங்குரோவ் காடுகள் உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பகம் பராமரிப்பில் தொண்டி, காரங்காடு, காந்திநகர், உப்பூர், ரெட்டை பாலம், கடலுார், முள்ளிமுனை, புதுப்பட்டினம், சம்பை, திருப்புல்லாணி, கொட்டாங்குடி ஆகிய பகுதிகளில் 555 எக்டேரில் அலையாத்தி (சதுப்பு) நிலகாடுகள் உள்ளன.

இவ்வாண்டு போதிய மழை பெய்துள்ளதால் விரைவில் தொண்டி காரங்காடு, ரெட்டை பாலம் பகுதியில் மட்டும் 15 எக்டேரில் மாங்குரோவ் செடிகளை வளர்க்க உள்ளோம். படிப்படியாக அனைத்து இடங்களில் வளர்க்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us