sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடியில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை மரப்பாலம் முடக்கம்

/

தனுஷ்கோடியில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை மரப்பாலம் முடக்கம்

தனுஷ்கோடியில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை மரப்பாலம் முடக்கம்

தனுஷ்கோடியில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை மரப்பாலம் முடக்கம்


ADDED : நவ 07, 2025 02:20 AM

Google News

ADDED : நவ 07, 2025 02:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் குவியும் பறவைகளை சுற்றுலா பயணியர் காண வசதியாக வனத்துறையினர் அமைத்த மரப்பாலம் பயன்பாடின்றி முடங்கியுள்ளது.

நவ., முதல் ஜன., வரை குளிர்கால சீசனில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் முதல், அரிச்சல் முனை கடற்கரை வரை தேங்கி கிடக்கும் நீரில், சிறிய மீன்கள், நண்டுகள் வாழும். இவற்றை உட்கொள்ளவும், குளிர் சீசனை அனுபவிக்கவும் பிளமிங்கோ பறவைகள், கடல் புறாக்கள் குவியும்.

இப்பறவைகள், குறிப்பாக டிச., மற்றும் ஜனவரியில் மட்டுமே வந்து, பிப்., மார்ச்சில் திரும்பி சென்று விடுகின்றன. இதன் பின், ஏப்., முதல் நீர் தேக்க பகுதிகள் வறண்டு கட்டாந் தரையாகிவிடும்.

ஓராண்டுக்கு முன், தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரத்தில், வனத்துறையினர், 90 லட்சம் ரூபாயில், சுற்றுலா பயணியர் பறவைகளை காண, டெலஸ்கோப் வசதியுடன் மரப்பாலம் அமைத்தனர்.

பாலம் திறந்து ஓராண்டு கடந்தும், தற்போது வரை 200 பயணியர் கூட இங்கு செல்லவில்லை.

ஓராண்டாக, நீர் தேக்க பகுதிகள் வறண்டு பறவைகள் வராததால், இந்த மரப்பாலம் பயன்பாடின்றி முடங்கியுள்ளது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளது என சுற்றுலா ஆர்வலர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us