sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போலி ஆவணம் தயாரித்து பணம் கையாடல் சங்க முன்னாள் துணைத்தலைவருக்கு சிறை

/

போலி ஆவணம் தயாரித்து பணம் கையாடல் சங்க முன்னாள் துணைத்தலைவருக்கு சிறை

போலி ஆவணம் தயாரித்து பணம் கையாடல் சங்க முன்னாள் துணைத்தலைவருக்கு சிறை

போலி ஆவணம் தயாரித்து பணம் கையாடல் சங்க முன்னாள் துணைத்தலைவருக்கு சிறை


ADDED : மே 09, 2025 03:26 AM

Google News

ADDED : மே 09, 2025 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் கையாடல் செய்த வழக்கில் புதுக்கோட்டை தச்சு, கொல்லு கூட்டுறவு தொழிலாளர்கள் குடிசைத் தொழில் சங்க முன்னாள் துணைத்தலைவர் கணேசனுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2006-2007 ல் ராமநாதபுரம் மாவட்டம் ஆதிதிராவிடர் நல கல்லுாரி மாணவர்கள் விடுதிக்கு மேஜை, நாற்காலி, கட்டில் வாங்கினர். இதில் அப்போதைய மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணி மற்றும் புதுக்கோட்டை தச்சு, கொல்லு கூட்டுறவு தொழிலாளர்கள் குடிசைத் தொழில் சங்கத்தின் துணைத்தலைவராக இருந்த கோவில்பட்டி கணேசன் 68, ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் கையாடல் செய்து அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்த நிலையில் 2012ல் அலுவலர் மணி இறந்து விட்டார். விசாரணைக்கு கணேசன் ஆஜரானார். இதில் கணேசனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற சிறப்பு நீதிபதி மோகன்ராம் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us