sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரத்தில் பறக்கும் படையிடம் சிக்கிய இலவச சைக்கிள்: ஆவணங்களால் தப்பியது

/

ராமநாதபுரத்தில் பறக்கும் படையிடம் சிக்கிய இலவச சைக்கிள்: ஆவணங்களால் தப்பியது

ராமநாதபுரத்தில் பறக்கும் படையிடம் சிக்கிய இலவச சைக்கிள்: ஆவணங்களால் தப்பியது

ராமநாதபுரத்தில் பறக்கும் படையிடம் சிக்கிய இலவச சைக்கிள்: ஆவணங்களால் தப்பியது


ADDED : மார் 19, 2024 05:19 AM

Google News

ADDED : மார் 19, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் இலவச சைக்கிள்கள் சிக்கியது. முறையாக பில் உட்பட ஆவணங்கள் இருந்ததால் தப்பியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குதற்காக ஆர்டர் செய்யப்பட்டிருந்த சைக்கிள்கள் பஞ்சாப் மாநிலம் லுதியானா சைக்கிள் கம்பெனியில் இருந்து கண்டெய்னரில் அனுப்பினர்.

இதனை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையோரத்தில் நிறுத்தி கண்டெய்னரில் இருந்து பள்ளிகளுக்கு சரக்கு வாகனங்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

ஜனார்த்தனன் துணைப்பதிவாளர் தலைமையிலான பறக்கும் படையினர் இலவச சைக்கிள்கள் எதற்காக வந்துள்ளது. யாருக்காக வந்துள்ளது, என விசாரித்தனர்.

வாகனங்களில் இருந்த அனைத்துக்கும் பில், மற்றும் முறையான ஆவணங்கள் இருந்ததால் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஆண்டு தோறும் வழங்கும் திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை அறிந்த பின்னர்கண்டெய்னரை விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us