நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் காமன்கோட்டை நிழல்கள் அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர். அறக்கட்டளை நிறுவனர் ராஜ்குமார் பாரதி முகாமை துவக்கி வைத்தார்.
இதில் கண்ணில் நீர் வடிதல், சர்க்கரை வியாதி யால் ஏற்படும் கண் குறைபாடுகள் மற்றும் அனைத்து வகையான கண் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. 40க்கும் மேற்பட்டவர்கள் அறுவை சிகிச்சைக்கு மதுரை அழைத்து செல்லப்பட்டனர்.

