ADDED : ஜன 01, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சபா நடேச அய்யர் பள்ளியில் ஸ்ரீவேதா அறக்கட்டளை, வாஸன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாமை நடத்தினர்.
அறக்கட்டளை நிறுவர் வீரமூர்த்தி தலைமை வகித்தார். ஜோதிட சங்கத்தலைவர் கதிர்கண்ணன் முகாமை துவங்கி வைத்தார்.
வாஸன் கண் மருத்துவமனை டாக்டர் வெற்றிசெல்வி தலைமையில் கண் பரிசோதனை, பார்வைத்திறன், ரத்த அழுத்தம் ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
145 பேர் கண் பரிசோதனை செய்ததில் 22 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
வாஸன் கண் மருத்துவமனை நிர்வாக மேலாளர் தீபா, மக்கள் தொடர்பு அதிகாரி வீரபிரபு, வேதா அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.------