ADDED : அக் 16, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்பில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராஜீ முன்னிலை வகித்தார். நரம்பியல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு, கண் சிறப்பு டாக்டர்கள் மாணவர்களை பரிசோதனை செய்தனர். ஏற்பாடுகளை வட்டார வளமையஆசிரியர்கள் செய்தனர்.