ADDED : ஜன 27, 2024 05:36 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழைமடல் காளியம்மன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக மூலவர் அம்மனுக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடந்தன.
தொடர்ந்து அம்மன் துதிப் பாடல்கள் பாடப்பட்டு மூலவர் அம்மனுக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
