/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முருகன் கோயில்களில் நாளைகந்தசஷ்டி விழா தொடக்கம்
/
முருகன் கோயில்களில் நாளைகந்தசஷ்டி விழா தொடக்கம்
ADDED : நவ 01, 2024 04:45 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருவயல் ரெணபலி முருகன்கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை(நவ.2) மாலை காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. விழாவின் முக்கியநிகழ்வாக நவ.,7ல் சூரசம்ஹாரம், நவ.,8ல் திருக்கல்யாணம் நடக்கிறது.
ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான பெருவயல் கிராமத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயில் உள்ளது. இங்கு கந்தசஷ்டி விழாவையொட்டி நாளை மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜையுடன் அபிஷேக ஆராதனைகளுடன் காப்புக் கட்டுதல் நடக்கிறது.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்பிரகார உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நவ.,7ல் சூரசம்ஹாரம், நவ., 8ல் திருக்கல்யாணம்நடக்கிறது. வழிவிடுமுருகன் கோயில், குண்டுக்கரைமுருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நடக்கிறது. கோயில்நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்கிதுள்ளனர்.

