sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கரையோரம் போடப்பட்ட விநாயகர் சிலைகள்

/

கரையோரம் போடப்பட்ட விநாயகர் சிலைகள்

கரையோரம் போடப்பட்ட விநாயகர் சிலைகள்

கரையோரம் போடப்பட்ட விநாயகர் சிலைகள்


ADDED : ஆக 30, 2025 11:35 PM

Google News

ADDED : ஆக 30, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகளை ஊருணிக்குள் போடாமல் கரையில் போட்டுவிட்டு சென்றதால் கரையாமல் கிடக்கின்றன.

ராமநாதபுரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் நம்ம சுவாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம்...' எனும் தலைப்பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டனர்.

அனைத்து விநாயகர் சிலைகளும் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் முன்பு கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டது.

இறுதியாக நொச்சியூருணிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கென தனியாக தண்ணீர் சேமிக்கப்பட்டு ஒவ்வொரு சிலையாக கரைக்கப்பட்டன.

இந்நிலையில் கொண்டு வந்த விநாயகர் சிலைகளில் 10க்கும் மேற்பட்ட சிலைகள் கரையாமல் கிடந்தன.

சில சிலைகளை தண்ணீருக்குள் போடாமல் கரையின் ஓரம் போட்டு சென்றதால் முழு விநாயகர் சிலையாகவே இருந்தன. இதனை பார்த்த மக்கள் வேதனை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us