/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலர் விபத்தில் சிறுமி பலி: உடலை வாங்க மறுத்து உறவினர் போராட்டம்
/
டூவீலர் விபத்தில் சிறுமி பலி: உடலை வாங்க மறுத்து உறவினர் போராட்டம்
டூவீலர் விபத்தில் சிறுமி பலி: உடலை வாங்க மறுத்து உறவினர் போராட்டம்
டூவீலர் விபத்தில் சிறுமி பலி: உடலை வாங்க மறுத்து உறவினர் போராட்டம்
ADDED : ஏப் 16, 2025 06:33 AM

ராமநாதபுரம், : -முதுகுளத்துார் அருகே தேரிருவேலியில் டூவீலர் மோதியதில் 3 வயது சிறுமி பலியானார். மோதியவர் மீது நடவடிக்கை கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
முதுகுளத்துார் ஜாஹிர் உசேன் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் அருண் அபிேஷக் தற்போது காத்தாகுளம் பகுதியில் வசிக்கிறார். இவர் நேற்று முன் தினம் (ஏப் .,14) மதியம் 3:30 மணிக்கு டூவீலரில் தேரிருவேலியில் இருந்து முதுகுளத்துார் நோக்கி சென்றார்.
அப்போது திடல் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த தாமரைக்கனி மகள் தர்ஷிகா 3, மீது மோதினார். இதில் தர்ஷிகா பலியானார்.
தாமரைக்கனி புகாரில் தேரிருவேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுமியின் உடலை வாங்க மறுத்து தாமரைக்கனி மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். முதுகுளத்துார் டி.எஸ்.பி., சண்முகம் பேச்சு வார்த்தை நடத்தினார். விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யாமல் சிறுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். தாமரைக்கனிக்கு மங்களேஸ்வரி என்ற மனைவியும், ஓவியா 5, என்ற மற்றொரு மகளும் உள்ளனர்.