ADDED : ஏப் 29, 2025 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேல்பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.
முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் தேன்மொழி, தமிழரசி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மீனம்பர் வரவேற்றார். மாணவர்களுக்கு விளையாட்டு, கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் கிரிஸ்டல் சுஜா, சபி பாலா, புனிதா கலந்து கொண்டனர்.