ADDED : பிப் 22, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி ஒன்றியம் பெருமாள் கோயில் அரசு உயர்நிலைப் பள்ளியில் கிராமத் தலைவர் முத்துராமசாமி தலைமையில் ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் திருநீலகண்ட பூபதி வரவேற்றார். ஆசிரியர் தனபிரபா ஆண்டறிக்கை வாசித்தார்.
கவிஞர் இதயா பேசினார்.ஆசிரியர் சண்முகப்பிரியா தொகுத்தார். மாணவர்கள்பாரம்பரிய நடனம், நாடகம் நடித்தனர். தேசிய பசுமைப் படை ஆசிரியர் கோட்டை ஈஸ்வரன், உடற்கல்வி ஆசிரியர் சரோஜினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜெயந்தி நன்றி கூறினார்.