ADDED : மார் 24, 2025 06:10 AM
ராமநாதபுரம்: தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி உலக தண்ணீர் தினம் மார்ச் 23ல் கிராம சபைக்கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டது. இந்த கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக மார்ச் 29க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 11.00 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்திட வேண்டும்.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தில், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்திட வேண்டும். மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.