ADDED : ஜன 06, 2026 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் தங்கியுள்ள அகதியான இலங்கையை சேர்ந்த ஜிம்ஸிவ் ரஜினி அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும், என ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மனு அளித்துள்ளார். ரஜினி கூறியிருப்பதாவது:
எனது மாற்றுத்திறனாளி கணவரும், குழந்தையுடன் இலங்கையில் இருந்து படகு மூலம் வந்து தற்போது மண்டபம் முகாமில் உள்ளோம். எங்களை சார்ந்தவர்கள் பலர் மீண்டும் இலங்கைக்கு சென்று விட்டனர். எங்களுக்கும் பாஸ்போர்ட் வழங்கி வழி அனுப்பி வைக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

