sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஊராட்சிகளில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரம் பாதிப்பு

/

ஊராட்சிகளில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரம் பாதிப்பு

ஊராட்சிகளில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரம் பாதிப்பு

ஊராட்சிகளில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரம் பாதிப்பு


ADDED : செப் 07, 2025 10:56 PM

Google News

ADDED : செப் 07, 2025 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் பல கிராமங்களில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறைகாரணமாக சுகாதார பணிகள் வெகுவாக பாதிக்க பட்டுள்ளன.

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சுகாதார பணிகளை மேற்கொள்ள துாய்மை இந்தியா திட்டம் செயல்படுகிறது. கிராமங்களில் குடியிருப்புகள் பல மடங்கு அதிகரித்தும், அதற்கேற்ப துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.

இதனால் வீடுதோறும் சென்று மக்கும், மக்காத குப்பையை, பிரித்து சேகரிப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது. சில குடியிருப்புகளுக்கு வாரத்தில் ஒரு முறை மட்டுமே பணியாளர்கள் செல்ல வேண்டிய நிலை உருவாகிறது.

இது தவிர குப்பை சேகரிக்க தேவையான உபகரணங்களும் இல்லை. மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் அடிப் படையில் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். காலியிடங்களில் கிடக்கும், உடைந்த மதுபாட்டில்கள், கண்ணாடித்துகள்களை சேகரிக்கும் போது பணியாளர்கள் காயமடைகின்றனர். சாக்கடைகளை துார்வாரும் போது, கையுறை உள்ளிட்ட எவ்வித உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையில் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இதனால் பணியாளர்கள் காயமடைவதுடன், நோய்த்தாக்குதலுக்கும் ஆளாகும் நிலை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய குப்பை வண்டிகள் பழுதாகிவிட்டதால் பயன்படுத்த முடியவில்லை.

இன்னும் சில மாதங்களில் பருவமழை துவங்கிவிடும். அப்போது கிராமங்களில் பெருமளவில் குப்பை சேரும். எனவே ஊராட்சிகளில் கூடுதலாக துாய்மை பணியாளர்களை நியமனம் செய்து, தேவையான உபகரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us