sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கில் விசாரணை செப்.9க்கு ஒத்திவைப்பு

/

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கில் விசாரணை செப்.9க்கு ஒத்திவைப்பு

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கில் விசாரணை செப்.9க்கு ஒத்திவைப்பு

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கில் விசாரணை செப்.9க்கு ஒத்திவைப்பு


ADDED : ஆக 27, 2025 12:27 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; ராணுவ ரகசியங்களை திருட உதவியாக இருந்த இலங்கை, மலேசியா நாட்டை சேர்ந்தவர்கள் மீதான வழக்கு செப்.,9 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் மேற்கு தெருவை சேர்ந்தவர் சித்தி சுலைஹா 52, இவரது அக்கா கணவர்மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல்ரஷீத் 58, அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவரது ஓட்டலில் வேலை பார்த்த இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த முகமது யாசீர் 40, மனைவி பாரிகா ரிஸ்மியா 35, ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

இவர்கள் சித்தி சுலைஹா வீட்டில் 2015 முதல் 2021 வரை தங்கியிருந்தனர். சித்தி சுலைஹா தனது ரேஷன் கார்டில் முகமது யாசீர் தம்பிஎன்றும், பாரிகா ரிஸ்மியா மருமகள் என அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களை தெரிவித்து சேர்த்துள்ளார். அதை வைத்து ஆதார் கார்டுபெற்று தந்துள்ளார். அதன் மூலம் இரண்டு சிம்கார்டுகளை முகமது யாசிர் பெற்று பாகிஸ்தான் நபரான ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம்தொடர்புள்ள முகமது மிப்லால் மவுலவி என்பவருக்கு கொடுத்துள்ளார்.

அந்த சிம்கார்டுகளை பயன்படுத்தி முகமது மிப்லால் மவுலவி ராணுவஅதிகாரிகளின் அலைபேசியில் இருந்து மால்வேர் அட்டாக் மூலம் ராணுவ ரகசியங்களை திருடி வந்துள்ளார். அலைபேசிகளை ஹேக் செய்துஅதில் உள்ள தகவல்களை அழித்துள்ளனர்.இது குறித்து தகவல் தெரிந்த கியூ பிரிவு போலீசார் 2021 ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்தி சுலைஹா, முகமது மிப்லால் மவுலவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். முகமது மிப்லால் மவுலவி மட்டும் தலைமறைவானார். மற்ற நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் வந்தனர்.

இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில்மாவட்ட தலைமை வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த நீதிபதி வழக்கின் விசாரணையை செப்.,9 க்கு ஒத்தி வைத்தார்.






      Dinamalar
      Follow us