/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் 4-வது நாளாக போராட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் 4-வது நாளாக போராட்டம்
ADDED : ஜன 30, 2025 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் சம்பள உயர்வை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் 4 வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயலில் உள்ள சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் அனைத்து கவுரவ விரிவுரையாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் 4வது நாளாக நடந்தது.
இதில் அரசு கலைக்கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசு அறிவித்தபடி குறைந்தபட்ச மாதச்சம்பளம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.