/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜன 28, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் சம்பள உயர்வை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ராமநாதபுரம் அச்சுந்தன் வயலில் உள்ள சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் அனைத்து கவுரவ விரிவுரையாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அரசு கலைக்கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதச்சம்பளமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.அரசு அறிவித்தபடி குறைந்தபட்ச சம்பளம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.