ADDED : செப் 29, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் டி பிளாக் பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் பத்மநாபன் 39. இவரது மனைவி வசந்தலெட்சுமி சூப்பர் மார்க்கெட்டில் கேஸ்சியராக உள்ளார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன.
மனைவியுடன் சண்டையிட்ட பத்மநாபன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றநிலையில்அவரை காப்பாற்றினர்.இந்நிலையில் நேற்று முன்தினம் பணிமுடிந்து வசந்தலெட்சுமி வீட்டிற்கு சென்று பார்த்த போது விஷம் குடித்து பத்மநாபன் மயங்கி கிடந்தார்.
அவரை ராமநாதபுரம் அரசு மருத்தவக்கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.