sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஒரு கால பூஜை நடக்கும் கோயிலில் பூஜாரிகளுக்கு அடையாள அட்டை

/

ஒரு கால பூஜை நடக்கும் கோயிலில் பூஜாரிகளுக்கு அடையாள அட்டை

ஒரு கால பூஜை நடக்கும் கோயிலில் பூஜாரிகளுக்கு அடையாள அட்டை

ஒரு கால பூஜை நடக்கும் கோயிலில் பூஜாரிகளுக்கு அடையாள அட்டை


ADDED : டிச 07, 2024 05:39 AM

Google News

ADDED : டிச 07, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி: ஒரு கால பூஜை நடக்கும் கோயிலில் பணியாற்றும் பூஜாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என சென்னை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் அறிவுறுத்தியும் நடவடிக்கையை எடுக்காத நிலை தொடர்வதாக பூஜாரிகள் குற்றம் சாட்டினர்.

கடலாடியை சேர்ந்த கோயில் பூஜாரிகள் நல சங்க தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கால பூஜை கோயில்களில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட பூஜாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லாமல் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து சமய அறநிலை துறை உதவி ஆணையரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் சென்னை ஹிந்து சமய அறநிலைத்துறை கூடுதல் கமிஷனர் சுகுமாரிடம் மாநில கோயில் பூஜாரிகள் நல சங்கம் தலைமை அறிவிப்பிற்கிணங்க புகார் தெரிவித்தேன்.

மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ஹிந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் இருந்து ஒரு கால பூஜை நடக்கும் பூஜாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்தும் அறிக்கையை தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு கடிதம் கிடைக்கப்பெற்றது என்றார்.






      Dinamalar
      Follow us