/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்கு அடையாள எண் நாளை முதல் பணிகள் துவக்கம்
/
விவசாயிகளுக்கு அடையாள எண் நாளை முதல் பணிகள் துவக்கம்
விவசாயிகளுக்கு அடையாள எண் நாளை முதல் பணிகள் துவக்கம்
விவசாயிகளுக்கு அடையாள எண் நாளை முதல் பணிகள் துவக்கம்
ADDED : பிப் 09, 2025 04:53 AM
திருவாடானை: விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்காக தகவல் சேகரிக்கும் பணிகள் நாளை (பிப்.10) முதல் துவங்குகிறது. ஆதார் எண் போல் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நாளை (பிப்.10) முதல் துவங்குகிறது. திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் தினேஸ்வரி கூறியதாவது:
விவசாயிகள் வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது அவர்கள் கொடுக்கும் தகவல்களை அடிக்கடி சரிபார்க்க வேண்டிய நிலை உள்ளது. இதில் நேர விரயம், பிரச்னைகள் ஏற்படுகிறது.
இவை ஏற்படாமல் இருக்க விவசாயிகளின் நலன் கருதி அடையாள எண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் இதற்கான பணிகள் நாளை (பிப்.10) முதல் துவங்குகிறது. அனைத்து ஊராட்சி அலுவலகம், இ-சேவை மையங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி வேளாண் துறையினரால் மேற்கொள்ளப்பட உள்ளது.
விவசாயிகள் தங்களது ஆதார் எண், சுய விபரங்கள், பட்டா சிட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கபட்ட அலைபேசி எண், ரேஷன் கார்டு போன்ற தகவல்களை நேரில் சென்று தெரிவிக்கலாம். முகாம்கள் காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.