sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் பயன்பாடின்றி கருகி வீணாகும் மரக்கன்றுகள்

/

பரமக்குடியில் பயன்பாடின்றி கருகி வீணாகும் மரக்கன்றுகள்

பரமக்குடியில் பயன்பாடின்றி கருகி வீணாகும் மரக்கன்றுகள்

பரமக்குடியில் பயன்பாடின்றி கருகி வீணாகும் மரக்கன்றுகள்


ADDED : செப் 30, 2024 04:39 AM

Google News

ADDED : செப் 30, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் கருகி வீணாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கண்காணித்து முறையாக வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரமக்குடியில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம், சாலையோர மரம் வளர்ப்பு, கிராமப்புறங்களில் பசுமை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரம் வளர்ப்பு திட்டம், கருணாநிதியின் நினைவு தின மரக்கன்று நடும் திட்டம் என ஒவ்வொரு நிலையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக பரமக்குடி ஊராட்சி உரப்புளி, வேந்தோணி பகுதிகளில் மரக்கன்றுகள் உருவாக்கப்படுகிறது.

மேலும் பள்ளிகளில் பசுமை திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாணவர்களும் மரக்கன்றுகளை பள்ளிகளுக்கு வழங்கி உள்ளனர். இது போன்ற மரக்கன்றுகள் தற்போது நட்டு வைக்கப்படாமல் வீணாகும் சூழல் அதிகரித்துள்ளது.

இதனால் தேசிய நெடுஞ்சாலை ஓரங்கள் உட்பட குறுங்காடுகள் திட்டம் வரை புதிதாக செயல்படுத்தப்படாமல் இருக்கிறது.

தொடர்ந்து மரக்கன்றுகளை பராமரிக்க போதிய நிதி தேவை என்பதால் ஊராட்சிகளிலும் திட்டம் கிடப்பில் விடப்பட்டுள்ளது. தற்போது பருவமழை காலம் துவங்கியுள்ள நிலையில், உடனடியாக அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் உள்ள மரக்கன்றுகளை கணக்கிட்டு நட்டு பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us