sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரத்தில் 1,92,660 ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் மூழ்கியது

/

ராமநாதபுரத்தில் 1,92,660 ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் மூழ்கியது

ராமநாதபுரத்தில் 1,92,660 ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் மூழ்கியது

ராமநாதபுரத்தில் 1,92,660 ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் மூழ்கியது


ADDED : ஜன 20, 2025 08:18 AM

Google News

ADDED : ஜன 20, 2025 08:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில், சம்பா பருவத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக குளங்கள், கண்மாய்களில் நீர் இருப்பு இருக்கும். இதை பயன்படுத்தி, 3 லட்சத்து 38,390 ஏக்கரில், விவசாயிகள் நெல் பயிரிட்டனர். நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.

பருவம் தவறி இரு நாட்களாக பெய்து வரும் மழையால் வயல்களில், கதிரோடு நெற்பயிர்கள் தரையில் சாய்ந்தன. மழைநீரில் மூழ்கியதில் நெற்பயிர்கள் மீண்டும் முளைக்க துவங்கி வீணாகின. பல இடங்களில் நெற்பயிர்கள் அழுகிவிட்டன.

வைகை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் பாக்கியநாதன் கூறியதாவது:

வங்கி மற்றும் தனியாரிடம், விவசாயிகள் கடன் வாங்கி நெல் பயிரிட்டிருந்தனர். பருவம் தவறிய மழையால் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் 1 லட்சத்து 18,560 ஏக்கர் உட்பட மாவட்டத்தில், 1 லட்சத்து 92,660 ஏக்கரில் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு, 30,000 ரூபாய் வரை விவசாயிகள் செலவிட்டுள்ளனர்.

தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தில் ரேண்டம் முறையில் அறுவடை செய்து கணக்கிட்டால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதியிலும் நேரிடையாக அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி, ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல, இரு தினங்களாக பெய்து வரும் கனமழையால் மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us