/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவி நிறைவு விழா
/
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவி நிறைவு விழா
ADDED : ஜன 05, 2025 05:28 AM
ஆர்.எஸ்.மங்கலம், : உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து பிரிவு உபசார விழா நடந்தது.
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு யூனியன் தலைவர் ராதிகா தலைமை வகித்தார். ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர் பாட்ஷா, திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் முன்னிலை வகித்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் யூனியன் தலைவர் ராதிகாவின் பணி சேவைகள் குறித்து முக்கிய பிரமுகர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் புகழாரம் சூட்டினர்.
தொடர்ந்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கும், அதிகாரிகள் பணி செயல்பாடுகள் குறித்து வாழ்த்திப் பேசினர்.
யூனியன் துணைத் தலைவர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் மோகன், கண்ணன், நகர் செயலாளர் கண்ணன் மற்றும் யூனியன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

