/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வரத்து அதிகரிப்பு: சந்தையில் சாத்துக்குடி 4 கிலோ ரூ.100
/
வரத்து அதிகரிப்பு: சந்தையில் சாத்துக்குடி 4 கிலோ ரூ.100
வரத்து அதிகரிப்பு: சந்தையில் சாத்துக்குடி 4 கிலோ ரூ.100
வரத்து அதிகரிப்பு: சந்தையில் சாத்துக்குடி 4 கிலோ ரூ.100
ADDED : ஜூலை 10, 2025 02:35 AM

ராமநாதபுரம்: வெளியூர்களில் இருந்து சாத்துக்குடி பழம் வரத்து அதிகரித்துள்ளதால் ராமநாதபுரம் வாரச்சந்தையில் சிறிய ரக பழங்கள்  4 கிலோ ரூ.100க்கு விற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் குறைந்த அளவில் சாகுபடி நடக்கிறது. குறிப்பாக ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்கள் வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து ராமநாதபுரம் வாரச்சந்தையில் விற்கின்றனர்.
தற்போது  ஆந்திராவில் அனந்தபூர், கடப்பா, நெல்லுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாத்துக்குடி விளைவிக்கப்படுகிறது.   அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு வருகிறது. தற்போது ராமநாதபுரம் சந்தைக்கு சாத்துக்குடி வரத்துள்ளதால் கடந்த மாதம் கிலோ ரூ.60 வரை விற்றது  விலை குறைந்து ரூ.40க்கு விற்கப்படுகிறது.
நேற்று நடந்த வாரச்சந்தையில் சிறிய ரக பழங்கள் 4 கிலோ  ரூ.100க்கு விற்றதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.

