/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நதிப் பாலம் ரோட்டில் சீமைகருவேல மரங்கள்: வாகன ஓட்டிகள் சிரமம்
/
நதிப் பாலம் ரோட்டில் சீமைகருவேல மரங்கள்: வாகன ஓட்டிகள் சிரமம்
நதிப் பாலம் ரோட்டில் சீமைகருவேல மரங்கள்: வாகன ஓட்டிகள் சிரமம்
நதிப் பாலம் ரோட்டில் சீமைகருவேல மரங்கள்: வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : ஜூன் 30, 2025 04:54 AM
தேவிபட்டினம் பனைக்குளத்தில் இருந்து நதிப்பாலம் வழியாக ராமநாதபுரம் செல்லும் ரோட்டின் இருபுறங்களும் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
தேவிபட்டினம் கோப்பேரி மடத்தில் இருந்து சித்தார்கோட்டை, அம்மாரி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம், நதிப்பாலம் வழியாக ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் வழியாக அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினரும், சுற்றுலா பயணிகளும் பயனடைகின்றனர். திருச்சி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள், ராமநாதபுரம் சென்று ராமேஸ்வரம் செல்வது கூடுதல் தொலைவு என்பதால் ராமநாதபுரம் வழித்தடத்தை தவிர்த்து தேவிபட்டினம் கோப்பேரி மடம் விலக்கு, நதிப்பாலம் வழித்தடத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதனால் இந்த வழித்தடத்தில் அதிகமான வாகன போக்குவரத்து உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் அழகன்குளம், நதிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் இரு ஓரங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனங்கள் விபத்துக்களில் சிக்குகின்றன.
மேலும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் ரோட்டோர உள்ள சீமைக்கருவேல மரங்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ரோட்டோரம் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.