/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கருட வாகனத்தில் பெருமாள் தைலக்காப்பு உற்ஸவம் துவக்கம்
/
கருட வாகனத்தில் பெருமாள் தைலக்காப்பு உற்ஸவம் துவக்கம்
கருட வாகனத்தில் பெருமாள் தைலக்காப்பு உற்ஸவம் துவக்கம்
கருட வாகனத்தில் பெருமாள் தைலக்காப்பு உற்ஸவம் துவக்கம்
ADDED : நவ 13, 2024 05:11 AM

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உச்சிகால கருட சேவையில் பெருமாள் உலா வந்த நிலையில் தைலக்காப்பு உற்ஸவம் துவங்கியது.
மதுரை அழகர் கோயிலில் சுந்தரராஜ பெருமாளுக்கு நடத்தப்படும் தைலக்காப்பு உற்ஸவம், பரமக்குடியில் வழக்கம் போல் விமரிசையாக துவங்கியது. நேற்று இரவு சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உற்ஸவர் சுந்தரராஜன் சயன கோலத்தில் எழுந்தருளினார்.
இன்று பெருமாள் கொண்டையில் தைலம் சாற்றி சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. வைணவ ஆச்சாரியார்களில் முதன்மையானவரான ராமானுஜரை கள்ளழகர் குருவாக ஏற்றுக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.
இவருக்கு அழகர் கோயிலில் தனிச் சன்னதி உள்ள நிலையில், ஐப்பசி மாதம் ராமானுஜர் முக்தி அடைந்தார். தொடர்ந்து குருவுக்கு செய்யும் மரியாதையாக அழகருக்கு தைலக்காப்பு உற்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இதன்படி அழகர் கோயிலில் நுாபுர கங்கை தொட்டி திருமஞ்சனம் எனப்படும் உற்ஸவம் நடக்கிறது. இதே போல் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலிலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த உற்ஸவம் கோலாகலமாக நடக்கிறது.
தொடர்ந்து நவ.15ல் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வருகிறார்.

