sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சிறையில் பட்டம் பெற்ற கைதி சுயதொழில்

/

சிறையில் பட்டம் பெற்ற கைதி சுயதொழில்

சிறையில் பட்டம் பெற்ற கைதி சுயதொழில்

சிறையில் பட்டம் பெற்ற கைதி சுயதொழில்


ADDED : பிப் 19, 2024 12:02 AM

Google News

ADDED : பிப் 19, 2024 12:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : -ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கே.கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிவேல், 48. இவர் தன், 2007ல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது ஒன்பதாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத இவர், சிறையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றார். பின், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலையில் பி.ஏ., வரலாறு படித்து முதல் வகுப்பில் சிறையிலேயே பட்டம் பெற்றார்.

அதன்பின், 2013ல் சிறையில் இருந்தபடி நவீன மாடலிங் முறையில் டெய்லரிங் கற்று அதில், 2016ல் சான்றிதழ் படிப்பு முடித்தார். நன்னடத்தை காரணமாக கடந்த மாதம் விடுதலையானார்.

பரமக்குடி, பாம்பு விழுந்தான் விலக்கு ரோட்டில், 'மென்ஸ் பார்க்' என்ற பெயரில் புதிய தையலகத்தை துவக்கி உள்ளார். நேற்று இதை சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி, கண்காணிப்பாளர் சதீஷ்குமார் திறந்து வைத்தனர்.

சாமிவேல் கூறியதாவது: சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறைசென்ற நான், அங்கு தொடர்ந்து படித்து பட்டம் பெற்றேன்; தையல் கற்றேன். தற்போது தொண்டு நிறுவன உதவியுடன், அரசு ஒரு தையல் இயந்திரம் வழங்கி உள்ளது. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us