/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்வி உதவித்தொகைவழங்க வலியுறுத்தல்
/
கல்வி உதவித்தொகைவழங்க வலியுறுத்தல்
ADDED : செப் 30, 2025 03:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: நயினார்கோவில் அருகே சாத்தனுாரைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி குணா ஜெயந்தி அவரது மகளுடன் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தார்.
அதில், எனது கணவர் செந்தில்குமார் 2023ல் இறந்து விட்டார். போதிய வருமானம் இன்றி சிரமப்படுகிறேன். எனது மகள் மவுசிகா அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். அவருக்கு அன்புக்கரங்கள் திட்டத்தில் பெற்றோரை இழந்து சிரமப்பட்டும் மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.