/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயணியர் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
/
பயணியர் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 31, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சவேரியார்பட்டினம் விலக்கில் இருந்த பயணியர் நிழற்குடை சிலஆண்டுகளுக்கு முன்பு வாகனம் மோதியதில்சேதமடைந்தது. அதன் பின் அங்கு புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை.
இந்த பஸ் நிறுத்தத்தில் சவேரியார்பட்டினம், புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, ரெட்டையூரணி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி கிராம மக்கள் மழை, வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சவேரியார் பட்டினம் விலக்கில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

