sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பனை மரங்களுக்கு மத்தியில் ஊடுபயிராக நிலக்கடலை

/

பனை மரங்களுக்கு மத்தியில் ஊடுபயிராக நிலக்கடலை

பனை மரங்களுக்கு மத்தியில் ஊடுபயிராக நிலக்கடலை

பனை மரங்களுக்கு மத்தியில் ஊடுபயிராக நிலக்கடலை


ADDED : அக் 25, 2024 05:03 AM

Google News

ADDED : அக் 25, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளான ஐந்து ஏக்கர், உறை கிணறு, நரிப்பையூர், கடுகுச்சந்தை, பூப்பாண்டியபுரம், கூரான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பனை மரங்களுக்கு மத்தியில் ஊடுபயிராக நிலக்கடலை சாகுபடி நடக்கிறது.

கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழையால் நிலத்தில் ஈரப்பதம் நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி பனை மரக்காடுகளுக்கு நடுவே ஊடுபயிராக நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.

விவசாயிகள் கூறியதாவது:

நிலங்களின் வரப்போரங்களில் பனை மரங்கள் மிகுதியாக உள்ளது.இந்நிலையில் பெரும்பாலான நிலங்களில் போதிய இடைவெளி விட்டு பனை மரங்கள் உள்ளன. டிராக்டரில் உழவு செய்து நிலக்கடலை விதைப்பு செய்துள்ளோம். தற்போது பெய்த மழையால் நிலக்கடலை செடிகள்நன்கு வளர்கிறது.

களைக்கொத்து எனப்படும் சிறிய அளவிலான மண்வெட்டி மூலம் நிலக்கடலை செடிகளின் மேற்பகுதிகளில் மண் அணைக்கும் வேலையை செய்து வருகிறோம்.

கூலியாட்கள் காலை 7:00 முதல் மதியம்1:30 மணி வரை இப்பணியில் ஈடுபடுகின்றனர்.ரூ.300 கூலி வழங்கப்படுகிறது.

பனை மரங்களுக்கு ஊடுபயிராக நிலக்கடலை சாகுபடி செய்யும் போது இயற்கை உரங்களால் நிலக்கடலை செடியும் வளர்கிறது. பனை மரத்திற்கும் தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது என்றனர்.






      Dinamalar
      Follow us