/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடல்நீர் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச கடல்பாசி தின விழா
/
கடல்நீர் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச கடல்பாசி தின விழா
கடல்நீர் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச கடல்பாசி தின விழா
கடல்நீர் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச கடல்பாசி தின விழா
ADDED : ஜூன் 05, 2025 01:06 AM
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் உள்ள மத்திய கடல் நீர் ஆராய்ச்சி நிலைய வளாகம் கூட்ட அரங்கத்தில் சர்வதேச கடல்பாசி தின விழா நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து கூறியதாவது:
சர்வதேச கடற்பாசி தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் கடல்பாசி வளர்ப்பில் அதிகளவு ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக லாபம் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். மீன்வளத்துறை, வனத்துறை அலுவலர்கள் அவ்வப்போது கடல்பாசி வளர்ப்போர்க்கு தக்க அறிவுரை வழங்குவதுடன் உறுதுணையாக இருக்க வேண்டும். மீன்வளத்துறையில் கடற்பாசி வளர்ப்போருக்கு மானிய திட்டத்தில் பல்வேறு கடன் திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய கடல் நீர் வளம் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் டாக்டர் வினோத், மத்திய உபரி நீர் ஆராய்ச்சி நிலைய அலுவலர் டாக்டர் வீர குருநாதன், ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.