sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கீழக்கரை கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

/

கீழக்கரை கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

கீழக்கரை கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

கீழக்கரை கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்


ADDED : டிச 14, 2024 06:24 AM

Google News

ADDED : டிச 14, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை : கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் இரு நாட்கள் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.

ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான புதுமையான யுக்திகளை ஆராய்ந்து அணுகும் முறை குறித்து இந்த கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் சுமையா வரவேற்றார். கனடா வின்னி பெக் பல்கலை சந்தைப்படுத்துதல் துறை பேராசிரியர் சத்யேந்திர சிங் முதல் அமைப்பில் கலந்து கொண்டு பேசினார்.

சென்னை வண்டலுாரில் உள்ள பி.எஸ்.எம். அப்துார் ரகுமான் கிரசண்ட் அறிவியல் கல்லுாரி தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை வேந்தர் தாஜுதீன், கனடா பல்கலை பேராசிரியர் மீரா கவுர், ஜாம்பியா நாட்டு உத்கல் பல்கலை ஓய்வு பேராசிரியர் பசந்தகுமார், ஆஸ்திரேலியா மெல்போன் நகரின் பயிற்சி பேராசிரியர் சுல்தான் கலிபா ஹாரூன்.

தமிழக அரசின் மாநில திட்ட குழு உறுப்பினர் சுல்தான் அகமது, காரைக்குடி அழகப்பா பல்கலை உயிரி எலக்ட்ரானிக்கல் துறை பேராசிரியர் சேகர், மதுரை காமராஜர் பல்கலை கடல் மற்றும் கடலோர ஆராய்ச்சித்துறை பேராசிரியர் ஆனந்த் உள்ளிட்டோர் பேசினர்.

ராமநாதபுரம் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் பங்கேற்று சிறந்த கட்டுரைகளுக்கு விருதுகளை வழங்கினார். வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் சேக் தாவுத் கான் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us