sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஜாதி ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சிறப்பு சட்டம் வேண்டும் மாதர் சங்க மாநில செயலாளர் கற்பகம் பேட்டி

/

ஜாதி ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சிறப்பு சட்டம் வேண்டும் மாதர் சங்க மாநில செயலாளர் கற்பகம் பேட்டி

ஜாதி ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சிறப்பு சட்டம் வேண்டும் மாதர் சங்க மாநில செயலாளர் கற்பகம் பேட்டி

ஜாதி ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சிறப்பு சட்டம் வேண்டும் மாதர் சங்க மாநில செயலாளர் கற்பகம் பேட்டி


ADDED : செப் 08, 2025 03:35 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ''தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும்,'' என, ராமநாதபுரத்தில் நடந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற அதன் மாநில செயலாளர் கற்பகம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு செப்., 24 முதல் 27 வரை கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடக்க உள்ளது.

நாடு முழுவதும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு நிகழும் அச்சுறுத்தல்களை தடுப்பது, பெண்ணுரிமையை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடக்கிறது.

இன்றைக்கு பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. அதனை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள் ஜாதி ஆணவக் கொலைகளுக்கு உள்ளாகின்றனர்.

ஜாதி ஆணவக் கொலைகளை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கு தனிச்சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். மாநில மாநாட்டில் பெண்கள் நலன் சார்ந்த தீர்மானம் முன்மொழியப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us