/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சீர் மரபினர் நலவாரிய அட்டை வழங்கல்
/
சீர் மரபினர் நலவாரிய அட்டை வழங்கல்
ADDED : மே 06, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: -கமுதி தாலுகா அலுவலகத்தில் நவம்பர் மாதம் சீர் மரபினர் மறவர் சமுதாய மக்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டங்களை பெறும் வகையில் சீர் மரபினர் நலவாரிய அட்டை விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.
கமுதியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நலத்துறை சார்பில் நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சீர் மரபினர் நலத்துறை அலுவலர் பழனி முதல் கட்டமாக 141பேருக்கு சீர் மரபினர் நலவாரிய அட்டை வழங்கினார்.