/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கு டிச.3 வரை சிறைக்காவல் நீட்டிப்பு
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கு டிச.3 வரை சிறைக்காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கு டிச.3 வரை சிறைக்காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கு டிச.3 வரை சிறைக்காவல் நீட்டிப்பு
ADDED : நவ 25, 2024 11:49 PM
ராமேஸ்வரம்; இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கு டிச.3 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நவ.9ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற கீதன், சகாயராஜ், ராஜா ஆகியோரது 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படை வீரர்கள் சிறை பிடித்தனர். 23 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரித்த நீதிபதி டிச.3 வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். போலீஸ் பாதுகாப்புடன் மீனவர்களை மீண்டும் சிறையில் அடைத்தனர். 15 நாட்களாக சிறையில் இருந்த மீனவர்கள் 23 பேரும் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் சிறையில் அடைத்ததால் அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.